
எமது தலைவன் மாறிவிட்டான்,அவனை மாற்றியது காலமா இல்லை காங்கிரஸா, அதை பற்றி நான் இங்கு எழுத போவதில்லை. துக்ளக் சோ, ஜெ இவர்கள் எல்லாம் விடுதலைபுலிகளை பயங்கரவாத இயக்கம் என குற்றம் சாட்டிய போது அவர்களை எதிர்த்து எம் தலைவன் இட்ட அறிக்கைகள் எராளம். இன்றோ இலங்கை தமிழனின் இன்றைய இழிநிலைக்கு காரணம் பிரபாகரனும் அவனின் விடுதலைபுலிகளின் இயக்கமே என்பதை தெள்ள தெளிவாக, சமநிலையோடு ஆய்வு செய்து அறிவித்து விட்டான்.
எம் தலைவன் ஈழ தமிழனின் துயர் துடைக்க அறப்போராட்டங்களான சாலைமறியல்,ரயில் மறியல்,பந்த் போன்றவற்றை நடத்தியுள்ளான் ஆனால் அவற்றை மெச்ச யாருமில்லை. ‘டெசோ’ என்ற இயக்கத்தை உருவாக்கி, அதில் அனைத்து போராளி குழுக்களை இணைத்து அதற்கு தலைமையேற்று, ஈழ தமிழனின் வாழ்வு மலர அரும்பாடு பட்டபோது, வெண்ணைய் திரண்டு வரும்போழ்து தாழி உடைந்த கதையாக பிரபாகரனும் அவனின் விடுதலைபுலிகளின் இயக்கம், சக போராளி குழுக்களை அழித்து இலங்கை அரசுக்கு மறைமுகமாக பேருதவி செய்தது. இதை எம் தலைவன் குறிப்பிட்ட போது நெடுமாறன் போன்ற புல்ருவிகள் கூக்குரலிடுகின்றனர்.
தன்னை கொல்ல சதி நடக்கிறது என்றும் அதன் காரணமாக வைகோ-வை கட்சியிலிருந்து நீக்கினான் ( பின்னர் கூட்டணியில் சேர்த்தது வேறு விஷயம் ). இது எம் தலைவனுக்கு புலிகளின் மேலிருந்த அபிமானத்தை மாற்றியது, இதை நிங்களும் ஆமோதித்தால் நான் அதற்கு உடன் படுகிறேன்??!!


