ஒரு பிராமணப்பெண் பத்து பிராமணரல்லாத கணவர்களை
முன்னம் கொண்டிருந்தாலும்
ஒரு பிராமணன் அவள் கரம்பிடிக்க
அவனே அவள் புருடனாவான்
அரசனுக்கும் வைசியனுக்கும் அப்படி ஆவதில்லை
ஐந்துவித மனிதர்க்குச்சூரியனே
அறிவித்தச் செய்தி இது
பிராமண மனைவியை
தேவர் மனிதர் அரசர் திருப்பி அளிப்பார்கள்
அளிக்க அறிவில்லா அரசனுக்கு ஆயிரம் அள்ளித்தரும்
அந்தப்புறச்சுந்தரிகள் ஏது
மாடுகள் கன்று ஈவது ஏது
உணவு படைக்க பொன்மாலை அணிந்த பணியாளேது
தேர் இழுக்கும் கருஞ்செவியுடை வெண்குதிரை
நோய் தீர்வதேது
ராசாங்கத்தில் தாமரைத்தடாகமொடு அல்லிக்குளமேது
அழகுப்பசுவின் பால் கறக்க ஆளேது
மனைவியில்லா பிராமணன்
உறங்கும் வீட்டில்
பசு சினைப்பிடிப்பதில்லை
காளையும் நுகத்தடி சுமப்பதில்லை
மானுடத்தலைவனே
பிராமணப்பசுவைப்புசிக்க விரும்பாதே
நஞ்சு நிறைந்தது துனபம் தருவது அது
பிராமணனை ச்சாது என நினைத்து
அவன் செல்வம் கொள்வோன்
மண்ணாலும் விண்ணாலும் வெறுக்கப்படுவான்
பிராமனன் நாக்கு வில்லாகும்
சொல் அம்பின் கழுத்தாகும்
அவன் கோபத்தால் தூரமிருந்தே
எதிரியை அழிப்பவன்
தேவனுக்கு உறவான பிராமணனை இம்சிப்போன்
பிதுர் உலகம் செல்வதில்லை
பிராமணனின் மீது கோழை உமிழ்வோர்
மயிர்ப் புசித்து ரத்த ஆறு அமர்வர்
பிராமணனை இம்சிக்கும்
தேசம் பாழாகும்
படகொன்றை சிறு ஒட்டை மூழ்கடிப்பதுபோலே
ராச்சியம் மொத்தமாய் அழிந்துபோம்
நாரத முனியே பிராமணனின் பொருளை
அபகரிப்போனுக்கு விருட்சங்கள் நிழல் தராது
முரசு கர்ச்சிக்கட்டும்
எதிரிகள் கலங்கட்டும்
அவர்தம் கருத்துக்கள் குழம்பட்டும்
சுரம் எனும் நோய் தூரஞ்செல்க
( அதர்வ வேதம் காண்டம் 5)
இது எப்படி இருக்கு..
