சிவாஜியையும், கமலையும் நம்மவங்க நீங்க நல்ல நடிகிறிங்க உலக சிறந்த நடிகர்கள் நீங்க தான் என்று உசுபிப்ஏற்றி விட்டு அவர்களை கஷ்டபடுத்தி நடிக்க வைத்த மக்க'ஸ். அதனால் அவர்கள் பல படங்களில் பயங்கரமாக நடித்து எப்படி எல்லாம் நம்மை கஷ்டத்திற்கு உள்ளாக்கியுள்ளார்கள் என்பதை உணர்து இருகிற்கள.
மறைந்த செவலேய சிவாஜி படத்தை இளசுகளே யாராவது தியேட்டரில் அல்லது டிவீ டி -லே பார்த்து இருகிர்களா, சமிபத்தில் சுமதி என் சுந்தரி என்ற பழயை சிவாஜி படத்தை பார்தேன், கொடுமையடா சுவாமி. ஒரு குண்டு சிவாஜி மற்றொரு சிவாஜி மீது உட்காருந்து கொண்டு பாட்டு பாடி, யப்பா சகிக்லே. அப்பா சிவாஜி போன்-லே "சுமதி என்று அழுதார் பாருங்கோ" சம காமெடி சிரி சிரி என்று சிரித்து எனக்கு தலைவலி வந்திருச்சி (என் நைனா கோவப்பட்டு என் பின்னந்தலைலே பட்டேன்று அடிச்சிட்டார்.) கொடுமையடா சுவாமி, அந்த காலத்தில் படம் 100 நாட்கள் ஓடிடுச்சாம். .
எனக்கு தெரிஞ்சு சிவாஜி அருமையாக நடித்த படம் பாரதிராஜா வின் முதல் மரியாதை. எதோ பூத்தகத்தில் படித்ததாக ஞாபகம் சிவாஜியே கேட்டராம் ஏன்டா இந்த படத்தில் நான் நடித்த மாதிரி தோணலே அதற்கு பாரதிராஜா படம் முடிஞ்ச பிறகு தியேட்டர் லே படம் பார்த்து விட்டு பிறகு சொல்லுங்கள் அண்ணா என்றாராம். படத்தை பார்த்த சிவாஜி எனக்கு உன்ன மாதிரி டைரக்டர் அந்த காலத்தில் கிடைக்கவில்லை என்று சொன்னாராம்?? .
கமல் விசயத்திற்கு வருவோம் கமல் சிவாஜி மாதரி கன்னா பின்னா வென்று நடிக்க ஆரம்பித்து விட்டார். பல விதமான முகமுடிகள் போட்டு கொண்டு நடிக்கிறார், எனக்கு எனவோ எதிர் கால இளசுகள் "கமலின் தசாவதாரத்தை பார்த்துவிட்டு கொடுமையடா சுவாமி என்று சொல்லி சிரிப்பார்கள் என தோன்றுகிறது. வேட்டையாடு விளையாடு படத்தில் ஆர்பாட்டம் இல்லாமல் கமலின் நடிப்பைதான் சிறந்த நடிப்பாக எனக்கு சொல்ல தோன்றுகிறது சமிபத்தில் வந்த உன்னை போல் ஒருவன் படத்தில் கமல் சாமானியனாக நடிக்க ரொம்ப கஷ்டபடுகிறார் கேரக்டரோடு அவர் ஒட்டவே இல்லை (உதாரணம் - சிந்து பைரவி யில் சுகாசினி நடிப்பு).
உலக நாயகன் கமலை ஞானி என்று துதி பாடும் கமலடியர்களே, கமலிடம் சொல்லுங்கள் " நீங்கள் போட்டு கொண்ட வட்டத்தில் இருந்து வெளிய வாருங்கள் " ஆஸ்கார் இல்லை அதற்கு மேல் எதாவது விருது இருந்தால் அதுவும் உங்களுக்கு கிடைக்கும் இல்லையனில் எதிர்கால இளசுகள் உங்க படத்தை பார்த்துவிட்டு கொடுமையடா சுவாமி என்று கமெண்ட் அடிப்பார்கள்