இது அப்பா டக்கரின் கண்டுபிடிப்பல்ல
அனனவருக்கும் தெரிந்தது தான். இதை நான் ஏன் சொல்ல வருகிறேன் என்றால் நம்மில் பலர் (சில பதிவர்களும்) சமஸ்கிரூதம் கற்றதினால் தாம் மற்றவர்களை விட மேலானவர்கள் என நினனக்கிறார்கள்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஓர் இனத்தினரால் பேசபட்ட மொழி சமஸ்கிரூதம். வியாசர், வால்மிகி,காளிதாசன் ஆகியோர் பிரமணர்கள் அல்ல ஆனால் அவர்கள் சமஸ்கிரூதத்தில் பேசி மற்றும் எழுதியுள்ளனர். ஏன் இராமர்,கிருஷ்ணர், பாண்டவார்கள்,பிஷ்மர்,கர்ணனை வளர்த்த தேரோட்டி வரை சமஸ்கிரூதத்தில் பேசியதாக அறிகிறோம்.
தற்கால பிரமணர்கள் சமஸ்கிரூதத்தை தேவமொழி, பிரமணமொழி என்று ஏன் சொல்லுகிறார்கள் என புரியவில்லை.கோவிலில்,கல்யாணத்தில், சமஸ்கிரூத மந்திரம் சொல்லும் பிரமணனுக்கு அம்தமந்திரத்தின் பொருளும், சரியான உச்சரிப்பும் தெரியவில்லை என்பதே உண்மை.
எனது பிரமண நன்பனின் விட்டிற்க்கு ஓரு நாள் சென்றேன் அப்போது அவனின் தந்தை ஏதொ ஓரு சமஸ்கிரூத புத்தகத்தை விரித்து படித்து கொண்டு இரூந்தார். என்னை பார்த்து ‘ வாப்பா எப்படி இருக்கே’ என குசலம் விசாரித்தார். நானும் நல்ல இருக்கேன் மாமா, என்ன படிக்கிறிங்க என கேட்டேன். அதற்கு அவர் சாம வேதம்டா, இதை படித்தால் மனம்,புத்தி தெளிவாகும்,கெட்டது எதுவும் அண்டாது என்றார். மாமா, அர்த்தம் தெரிந்து தான் வேதம் படிக்கிறிர்களா என கேட்டேன்,டென்ஷன் ஆகிவிட்டார்...
பிறமொழி எழுத்துக்களை கொண்டூ தான் சமஸ்கிரூத வார்த்தைகளை படிக்க முடியும், அதனால் பிரமணர்கள் அதை தப்பாக உச்சரித்தாலும் நாம் அதை பற்றி கவலை படுவதில்லை. அதே சமயம் ஆங்கிலத்தை யாராவது தப்பாக உச்சரித்தால் மிக்க வேதனை படுகிறோம்.சமஸ்கிரூத மந்திரத்தை உயர்சாதியினர் அல்லதேரர் கேட்டால் அவர்களை அக்குவேறு,ஆணிவேறாக பியக்க சொல்லுகிறது ஓரு வேதம். இதற்கான அர்த்தம், அக்கால தாழ்குலத்தினருக்கு சமஸ்கிரூதம் புரியும் அல்லது சமஸ்கிரூத மொழியில் அவர்களும் பேசினார்கள் என தான் எடுத்து கொள்ள வேண்டியிருக்கிறது.
சமஸ்கிரூதம் பலதரபட்ட மக்களால் பேசப்பட்ட மொழியே அன்றி பிரமணர்களின் அல்லது ஏனைய உயர்சாதியினரின் அல்லது தேவர்களின் மொழி அல்ல தமிழ், ஆங்கிலம் போல் அதுவும் ஓன்று. எப்படி ஆங்கிலம் நம்மிடையே உட்புகுந்து தமிழை மெல்ல ஓரம் கட்டுகிறதோ அதே போன்று பிறமொழி ஆதிகத்தினால் சமஸ்கிரூதம் அழிந்து தற்போது கடவுளின் உருவச்சிலை முன்னால் உச்சரிக்கும் மொழியாகிவிட்டது.