Thursday, 27 August 2009

இவன் வெள்ளக்காரியை இழுத்துக்கினு வந்திடுவான் பாரு.

..



இது தெரு முனையிலே பசங்களோட நின்னுகின்னு திருட்டு தம்மடிக்குது பாரு,எங்கே உருப்பட போகுது- நம்ப காதுபட தெரு பெருசுங்க பேசிச்சுங்கபா











நான் பாஸ் மெரிட்ல அதுவும் கோல்ட் மெடல் என்றவுடன் பெருசுங்க நம்ப முடியாமல், ‘இது பிட் அடித்து பாஸ் ஆயிருக்கும்’ என்று தங்களை தாங்களே தேத்தி கொண்டதுங்கப்பா



.......அதே பெருசுங்க எனக்கு படித்து முடித்தவுடனே கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி வேலை கிடைத்தவுடனே, ‘அவனுக்கு அதிர்ஷ்டம்’என பெருமுச்சுவிட்டதுங்ப்பா.


இதே பெருசுங்க, என்னப்பா எப்போ வெளிநாடு போக போறே என கேட்டுச்சுங்கப்பா, TRY பண்ணி கொண்டிருக்கேன் என்று சொன்னவுடன்,இவனுக்கல்லாம் வெளிநாட்டு வேலை எங்கே கிடைக்க போறது என்று என் முதுகு பின்னால் முணுமுணுக்குதுங்கப்பா.


திரும்பவும் இதே பெருசுங்க,எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தவுடன், ‘வெளிநாடு போறான் இவன்’ அங்கிருந்து ஓரு ‘வெள்ளக்காரியை இழுத்துக்கினு வந்திடுவான் பாரு’ என சொல்லுதுங்கப்பா

இந்த மாதிரி பெருசுங்களை என்ன செய்வது, எனக்கு ஓன்னுமே புரியல்லைப்பா, உங்களூக்காவது எதாவது தோணுதா.

1 comment:

Anonymous said...

வெள்ளக்காரி இழுத்துக்கிட்டு பொய் அந்த பெருசுங்க மூஞ்சுல கரிய பூசு மச்சி!!!