பாமர் காமராஜரிடம் படித்தவன் பட்ட அல்லல் .....தினமலரில் நான் இன்றய படித்த செய்தி இந்த ப்ளாக் ஐ எழுத தோன்றியது . நான் காமராஜரை குறை சொல்ல வில்லை ,அவர் நல்ல மனிதர் ஆனால் படிப்பு அறிவில்லாதவர். ஒரு சங்க கால புலவர் சொல்லி இருக்கார்
"கொடியது கல்லாதவன் கிழ் கற்றவன் பணி புரிவது " "
"காமராஜர் முதல்வராக இருந்த போது, சென்னையின் புறநகர்ப் பகுதிகளில், மேல்நாடுகளைப் போல் குட்டி நகரங்களை (சாட்டிலைட் சிட்டி) அமைக்க, நகர அபிவிருத்திக் கழக அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக ஒரு குழுவினர் வெளிநாடு சென்று, அங்குள்ள நகரமைப்பு முறைகளை பார்த்து வரலாம் என முடிவானது. இதற்கு துறை அமைச் சரும் ஒப்புதல் கொடுத்துவிட்டார்.அடுத்ததாய், முதல்வர் காமராஜர் ஒப்புதல் கொடுத்தால், விமானப் பயணம் போக அதிகாரிகள் தயாராய் இருந்தனர். இந்த நிலையில், ஒப்புதலுக்காக முதல்வர் காமராஜரிடம், கோப்பு சென்றது. அதைப் படித்துப் பார்த்தார் காமராஜர். "மக்கள் கொடுத்த வரிப் பணத்தில் இந்த உலகச் சுற்றுலா தேவை தானா' என்று அவருக்குள் கேள்வி எழுந்தது.இந்த சிந்தனையின் போது, அவரது மனதில் மதுரை நகரத்தின் வடிவமைப்பு தோன்றியது. மதுரையின் மையப் பகுதியில் மீனாட்சியம்மன் கோவில்; சுற்றிலும் தேரோடும் ரத வீதிகள்; அடுத்த சுற்றில் அளவெடுத்து வைத்தார் போல், நான்கு மாட வீதிகள்; அதற்கடுத்து வீதிகள்; இடையில் இவைகளை இணைக்கும் சாலைகள்."அந்தக் காலத்திலேயே, எவ்வளவு தொலைநோக்கோடு நம் முன்னோர் நகரை வடிவமைத்திருக்கின்றனர். இந்த அமைப்புக்கு மேல், நகரமைப்பு திட்டமிட என்ன இருக்கிறது' என்று நினைத்த காமராஜர், அதையே, கோப்பில் குறிப்பாக எழுதினார்."நகரமைப்புக்காக வெளிநாட்டு பயணம் தேவையில்லை. எக்காலத்திற்கும் ஏற்றார்போல் அமைக்கப்பட்டிருக்கும், நம் மதுரை நகருக்குச் சென்று, ஆய்வு செய்து வாருங்கள்' என்று குறிப்பெழுதி, வெளிநாட்டு பயணத்துக்கு தடைபோட்டு, மக்கள் வரிப்பணத்தை காத்தார் காமராஜர்."
ஒரு நகரை நிர்மாணிக்க " டவுன் ப்லான்னிங்" (TOWN PLANNING) அவசியம், சுதந்திரத்திற்கு பிறகு தொலை நோக்கு பார்வை இல்லாமல் நிர்மாணித்த சாலைகள்,நகர்கள் இன்று விரிவு படுத்த முடியாமல் இருக்கிறோம். காமராஜர் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் படித்த தொலை நோக்கு பார்வை கொண்ட ஒரு குழு ( அப்போதைய அரசு பணியாளர்களில் ஊழல் குறைவு )
அயல் நாடுகள் சென்று பார்வை இட்டு அங்குள்ள் வல்லுனர் களோடு கலந்து ஆலோசித்து அவர்களின் தொழில் நுட்பம் கொண்டு தமிழகத்தை நிர்மானிக்க காமராஜர் இடம் அனுமதி கோரியது
அதற்கு
காமராஜர் அரசு பணத்தை மிச்சம் பிடிக்கிறேன் என்று சொல்லி அவர்களை போகவிடாமல் தடுத்து விட்டார். அக்கால அதிகாரிகள் எடுத்து சொல்லி இருப்பார்கள், படிப்பு சுட்அறிவை கொடுக்கும் பட்டறிவு கொண்ட காமராஜர் புரிந்து கொள்ளாமல் அவர்களை மதுரைக்கு போக சொல்லி அசிங்க படுத்தி விட்டார் - அவர் அந்த அதிகாரிகளை டெல்லி காவது அனுப்பி ஷஹ்ஜஹான் (shahjahan) நிர்மாணித்த நகரை பார்க்க சொல்லி இருக்க வேண்டும் .
அதனால் நஷ்டம் அவருக்கு அல்ல நம் நாட்டுக்கு
No comments:
Post a Comment